• Sep 21 2024

பிரதமர் கையால் இளையராஜாவிற்கு கிடைக்கவுள்ள கௌரவம்... அதுவும் எங்கு தெரியுமா... குவியும் வாழ்த்துக்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசை ரசிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றால் அது இசைஞானி இளையராஜா இவர். இவரின் குரலில் உருவாகும் பாடல்கள் யாவுமே இன்றுவரை நம் மனதில் நீங்காத இடத்தினைப் பிடித்து நிற்கின்றார். அதுமட்டுமல்லாது இன்றுவரை பிசியான ஒரு இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டு இருக்கிறார். 


இந்நிலையில் இவரது இசையில் தற்போது வெற்றிமாறனின் விடுதலை படம் தயாராகி வருகிறது. மேலும் இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் கடந்த ஜூலை மாதம் அவரை ராஜ்யசபாவில் நியமன எம்.பி.யாக நியமித்து எதிர்பாராத வகையில் பெருமைப்படுத்தியது மத்திய அரசு. 


அந்த சமயத்தில் இதுகுறித்து பல விமர்சனங்களும் எழுந்தன. அதாவது இளையராஜா அந்த அந்நேரத்தில் மோடியை அம்பேத்கரோடு ஒப்பிட்டு பேசியதற்கு கிடைத்த பரிசு தான் இந்த எம்.பி. பதவி என்றெல்லாம் பலரும் கூறி இருந்தனர்.

இவ்வாறான பாராட்டுக்கள், விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க தற்போது இளையராஜாவுக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைக்க உள்ளது. அந்தவகையில் அவருக்கு நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளதாம். 


அதாவது திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் நாளை பிரமாண்டமாக இப்பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில் பிரதமர் மோடி கையால் தான் இந்த கவுரவ டாக்டர் பட்டத்தை பெற உள்ளார் இளையராஜா. 

அத்தோடு இந்த விழாவில் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. மேலும் மோடியின் வருகையால் திண்டுக்கல் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement