• Sep 20 2024

பிரபல நடிகரின் படத்தில் விஜய் சேதுபதி வந்ததும் திடீரென விலகிய பகத் பாசில்…உண்மை தானா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் தான் புஷ்பா.இந்த திரைப்படம் கடந்த டிசெம்பர் 18 வெளியானது.இத்திரைப்படம் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகியது. இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்ததோடு அதில் பகத் பாசிலும் நடித்து இருந்தார். .

இப் இப்படம் ரூ. 200 பட்ஜெட்டில் தயாரானது.ஆனால் படத்தின் வசூலோ பெரிய அளவில் இருந்தது, அதாவது ரூ. 355 முதல் ரூ. 365 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளது.

இதில் நடிகை சமந்தா ஆடிய ஸ்பெஷல் பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கிறது, இப்போதும் ஹிட் லிஸ்டில் உள்ளது கூட.

மேலும் இரண்டாம் பாகத்தில் பகத் பாசில் மற்றும் அல்லு அர்ஜுனின் மோதல் எப்படி இருக்கப்போகிறது என்ற விறுவிறுப்பான காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்க இப்போது ஒரு ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இரண்டாம் பாகத்தில் இருந்து நடிகர் பகத் பாசில் சில காரணங்களால் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வருகிறது. ஆனால் சில தகவல்கள் பகத் பாசில வெளியேறவில்லை, விஜய் சேதுபதி இணைந்துள்ளார் என்று குறிப்பிடுகின்றனர்.

விஜய் சேதுபதி நடிக்க வந்தாலும் பகத் வெளியேறிவிட்டார் என வந்த சில தகவல்கள் ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement