• Sep 20 2024

உண்மையைத் தெரிந்து கொண்டு ஆட்டம் போட்ட கோபி- பழனிச்சாமியிடம் மன்னிப்புக் கேட்ட பாக்கியா- ராதிகா கேட்ட கேள்வி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பழனிச்சாமி பொண்ணு பார்க்க வந்த விஷயத்தை கோபி ஈஸ்வரியிடம் பேசிக் கொண்டிருக்கின்றார். இது எல்லாம் சரி இல்லை. வளர்ந்த புள்ளைகளை வைச்சுக் கொண்டு பண்ணுற வேலையா என்று சொல்ல ஈஸ்வரி பிள்ளைகளா சந்திராவும் இன்னும் கல்யாணம் பண்ணல பழனிச்சாமியும் இன்னும் கல்யாணம் பண்ணல அப்பிறம் எப்படிப் பிள்ளை வரும் என்று சொல்கின்றார்.


பழனிச்சாமி சந்திரா என்ற பொண்ணைத் தான் பொண்ணு பார்க்க வந்ததை நினைத்து கோபி ஆட்டம் போடுகின்றார். பின்னர் ரூமுக்குச் சென்று குஷியாக இருக்க ராதிகா என்ன ஆச்சு என்று கேட்க பாக்கியாவைப் பொண்ணு பார்க்க வரல என்ற விஷயத்தை உளறி விடுகின்றார். அப்போது ராதிகா உங்களுக்கு பாக்கியா மேல லவ் இருக்கு அதனால தான் இப்பிடி இருக்கிறீங்க.

பொண்ணு பார்க்க வாராங்க என்று சொன்னப்போ கவலையா இருந்தீங்க. அவங்களை பொண்ணு பார்க்க வரல என்று தெரிஞ்சதும் ரொம்ப ஹப்பியா மாறீட்டீங்க என்று சொல்ல கோபி சமாளிக்கின்றார். பின்னர் கோயிலுக்கு போய்ட்டு வரும் ஈஸ்வரி  இனியாவுக்கும் எழிலுக்கும் திருநீறு வைத்து விட்டு பாக்கியாவிடம் கொடுக்கின்றார்.


பாக்கியா அதை வாங்கிக் கொண்டு இருக்க இனியா எக்ஸ்ஷாம் பற்றி எல்லோரும் பேச ஈஸ்வரி இனியாவை உள்ளே வந்து படிக்க சொல்லி கூட்டிட்டு போகின்றார். தொடர்ந்து பழனிச்சாமி வீட்டுக்கு வரும் பாக்கியா பழனியின் அம்மாவுக்கு சாப்பாட்டைக் கொடுத்து விட்டு பழனிச்சாமியிடம் மன்னிப்புக் கேட்கின்றார்.

எழிலின் அப்பா இங்க வந்ததுக்கு மன்னிச்சுக்கோங்க என்று சொன்ன போது பழனிச்சாமி அவர் தப்பா எதுவும் பேசல உங்க வீட்டுக்கு வரக்கூடாது உங்க கிட்ட பேசக் கூடாது என்று மட்டும் தான் சொன்னாங்க என சொல்ல பாக்கியா அதிர்ச்சியடைய இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement