• Sep 21 2024

ஓவராகப் பேசிய கோபியிடம் பாக்கியா போட்ட கண்டிஷன்- திகைத்து போய் நின்ற ராதிகா- கோபத்தில் எழில் எடுத்த முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா, நான் தரவேண்டிய பணத்தை தந்தால் வீட்டை விட்டுப் போவீங்களா என்று கேட்கும் போது கோபி கொடு பார்க்கலாம் என்று சொல்ல, பாக்கியா ,அந்தக் கதை எல்லாம் வேணாம் பணத்தைக் கொடுத்தால் உங்கட குடும்பத்தைக் கூட்டிட்டு வீட்டை விட்டு போவீங்களா என்று கேட்க கோபி கொடு போறேன் என்று சொல்கின்றார்.


அப்போது பாக்கியா இன்னும் ஒரே மாசத்தில உங்க பணத்தை உங்க மூஞ்சிலையே வீசிட்டு அப்போ பேசுறேன் என்று சொல்கின்றார். கடுப்பான கோபி ராதிகாவைக் கூட்டிக் கொண்டு மேலே செல்கின்றார். தொடர்ந்து ஈஸ்வரி அழ, கவலைப்படாதீங்க அத்தை இன்னும் ஒரு மாசம் தான் அதுக்கு பிறகு நிம்மதியாக இருக்கலாம்.

இது நம்ம வீடு அத்தை நாம எங்கையும் போக வேணாம் என்று சொல்லி பாக்கியா ஆறுதல்ப்படுத்துகின்றார்.பின்னர் ராதிகா அவரின் அம்மாவிடம் போன் பண்ணி பாக்கியா சவால் விட்ட விஷயத்தை சொல்ல அவர் பாக்கியாவால் பணம் எல்லாம் கொடுக்க முடியாது அவ சும்மா கதை விடுறா எனச் சொல்லி இருவரும் கோபி குடும்பத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நேரம் கோபி உள்ளே வர போனை கட் பண்ணுகின்றார் ராதிகா. அப்போது கோபி எப்பவும் சண்டை இந்த வீட்டில நிம்மதியா இருக்க முடியுதா எனக் கேட்க ராதிகா நான் என்ன பண்ணினேன் அவங்க பண்ணினது சரியா என்று கேட்க கோபி நீ அம்மா கிட்டையாவது ஒழுங்காகக் பேசி இருக்கனும் என்று சொல்லி திட்டுகின்றார்.


தொடர்ந்து செழியனும் ஜெனியும் வீட்டில் நடந்த விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது ஆபிஸில் இருந்து செழியனுக்கு போன் அடிக்கடி வர செழியன் கட் செய்கின்றார். கடுப்பான செழியனின் மேடம் இப்பவே உங்களைப் பார்க்கனும் என்று சொல்ல செழியன் கிளம்பிப் போகின்றார்.

அதே போல் அமிர்தா ,எழில் ,இனியா, பாக்கியா எல்லோரும் இருக்கும் போது ராதிகா வீட்டில் சண்டை இழுத்து விட்டது பற்றியும் வீட்டுக்கு கோபி பணம் கேட்ட விஷயத்தையும் இனியா சொல்ல எழில் கோபப்படுகின்றார்.அப்போது பாக்கியா பணத்தை கொடுத்திட்டு பேசுவோம் என்று சொல்ல எழிலும் எப்படியாவது பணத்தை கொடுத்திரனும் என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement