• Sep 21 2024

ராதிகாவையும் கோபியையும் அவமானப்படுத்தி அனுப்பிய பாக்கியா- சரியான பதிலடி கொடுத்த ஈஸ்வரி- சந்தோஷத்தில் அழுத ராமமூர்த்தி

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

கோபியின் அப்பா பணத்தையும் வாங்கிட்டு இங்கையே இருந்திரலாம் என்று யோசிக்கிறியா மரியாதையா இங்க இருந்து போ என்று சொல்ல கோபி நீங்க எப்பவுமே பாக்கியாவுக்கு தானே சர்ப்போட் பண்ணுவீங்க நான் அம்மா கிட்ட பேசிக்கிறேன் என்று கோபி ஈஸ்வரியிடம் சென்று நான் இங்க இருந்து போறது கவலையா இல்லையா என்று கேட்கின்றார்.


அப்போது ஈஸ்வரி நான் எதுக்கு வருத்தப்படனும் இவளோட அம்மா என்னை பொலிஸ்ல பிடிச்சுக் கொடுக்கப் பார்த்தாலே அப்போ நீ வருத்தப்பட்டியா, இவ என்னை வீட்டை விட்டு போக சொன்னாளே அப்போ ஏதாவது கேட்டியா குத்துக் கல்லு மாதிரி தானே நின்ற பாசம் இருக்கிற மாதிரி நடிக்காத எனத் திட்டுகின்றார்.

தொடர்ந்து கோபி செழியன் கிட்ட பேச செழியன் நீங்க குடிச்சிட்டு ரோட்டில கிடக்கும் போது நான் உங்களை கூட்டிட்டு வந்திருக்க கூடாது கூட்டிட்டு வந்திருக்காட்டி இந்தப் பிரச்சினை வந்திருக்குமா,இது மட்டும் தான் கவலை என்று சொல்ல கோபி அதிர்ச்சியடைகின்றார். தொடர்ந்து இனியா எனக்காக பேசுவா என்று சொல்ல இனியா பாக்கியா பின்னாடி போய் நின்று உங்ளால நாங்க பட்ட கஷ்டம் எல்லாம் போதும் என்கிறார்.


அப்போது பாக்கியாவும் வீட்டை விட்டு போங்க என்று சொல்ல கோபி போகமாட்டேன் என்று சொல்ல ராதிகா இல்லை கோபி இதுக்கு மேல இங்க இருந்தால்  நமக்கு மரியாதை இல்லை என்று சொல்லி கோபியை மேலே கூட்டிட்டு போய் பாஃக் எல்லாம் எடுத்துக் கொண்டு கீழே வர பாக்கியா பணம் தந்தாச்சு எப்போ வீட்டை எங்க பேர்ல மாத்தித் தருவீங்க என்று கேட்ட கோபி அதெல்லாம் மாற்றித் தரமுடியாது என்கிறார்.

அப்போது கோபமடைந்த பாக்கியா மிஸ்டர் கோபிநாத் உங்க கிட்ட பணத்தை கொடுத்து ஏமாறனும் என்று எங்களுக்கு ஆசை இல்லை என்று சொல்ல ராமமூர்த்தியும் நாளைக்கே நீ வீட்டை எங்க பேர்ல மாத்தித் தரல என்றால் நடக்கிறதே வேற எனத் திட்டுகின்றார். அப்போது பாக்கியாவும் அவர்களை வெளியே போக சொல்ல இருவரும் போகின்றனர். பாக்கியா இருவரையும் வெளியே அனுப்பி கதவை மூடுகின்றார்.


பின்னர் வீட்டுக்குள் வந்ததும் ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் பாக்கியா கையைப் பிடித்து பாக்கியாவுக்கு நன்றி சொல்லி அழுகின்றனர். வீட்டையும் பாக்கியா பேர்லையே எழுதச் சொல்கின்றனர்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement