விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற சீரியல் என்றால் அது 'பாக்கியலட்சுமி' தான். இந்த தொடரின் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், அவரின் கணவராக சதீசும் நடித்து வருகிறார்கள்.
அந்தவகையில் இந்த சீரியலில் கோபி என்ற வேடத்தில் நடித்துவரும் சதீஷ் பற்றி ஒரு பரபரப்புத் தகவல் வெளியாகி இருந்தது. அதாவது சமீபத்தில் கேரளாவில் இருந்து சதீஷ் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் "நான் 3நாளாக கேரளாவில் ஷூட்டிங்கில் இருக்கேன், அதைப் பற்றி கொஞ்சநாள் கழித்து சொல்கிறேன்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி இனிமேல் வர மாட்டாரு எனப் பலரும் கூறி இருந்தனர். இதனையடுத்து இவரின் சீன்ஸ் அதிகளவில் குறைக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் முதல் இருந்தளவு முக்கியத்துவம் இதில் கோபிக்கு தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கோபி சமீபத்தில் வெளியிட்ட அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், இவர் புது சீரியலில் நடிப்பதற்காக தான் கேரளா போய் இருப்பதாக கூறி வந்திருந்தனர். அதுமட்டுமல்லாது அந்த புது சீரியல் எது எனவும் பலரும் கேட்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது நடிகர் சதீஷ் மலையாளத்தில் ஒரு தொடரில் நடிக்கவே கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு கோபி மலையாள சீரியலில் நடிக்க இருப்பது தமிழ் ரசிகர்கள் ஒரு சில பேருக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. எது எவ்வாறாயினும் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரைக்கும் சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!