நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் 500கோடியைத் தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இமயமலைக்கு ஆன்மீக சுற்றுலா சென்றிருந்த ரஜினி பல அரசியல்வாதிகளையும் சந்தித்து இருந்தார்.
அந்தவகையில் உத்தர பிரதேசம் சென்ற ரஜினி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பார்த்த உடன் அவரின் காலில் விழுந்து வணங்கினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. மேலும் 72 வயதான ரஜினிகாந்த், 51 வயதான யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது முறையல்ல என இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், யோகி ஆதித்யநாத் மீதான மரியாதையின் நிமித்தம் ரஜினி இந்த செயலை செய்ததாக அவரின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சதீஷ் இது குறித்து தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார். அதில் அவர் பேசுகையில் "இரண்டு, மூன்று நாட்களாக முதலமைச்சர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டார் என்று அதைப்பற்றி ஒரு சர்ச்சையை ஓடிற்று இருக்கிறது, அது அவர் இஷ்டம் அவர் என்னவும் பண்ணவும்" எனக் குறிப்பிட்டு இருக்கின்றார்.
மேலும் "எல்லாருக்கும் ஏன் முக்கியமாக ரசிகர்கள் ஏன் இப்படி வன்முறையாக அதை ரியாக்ட் பண்ணுறாங்க, சூப்பர் ஸ்டாரைத் தாக்கிப் பேசினாங்க என்று கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க, ஏனெனில் ரஜினி சார் அவர் வீட்டில் ஒரு சாதாரணமான மனுஷனாக இருக்கார், ஆனால் நாம அவரை நாம தலைமேல் வச்சுக் கொண்டாடிட்டு இருக்கோம், அப்படிப்பட்ட தலைவன் வயசு குறைந்தவர் காலில் விழுந்தது பிடிக்கல, அந்தக் கோபத்தினால் தான் இதெல்லாம் ஓடிற்று இருக்கு" எனவும் கூறியுள்ளார்.
Listen News!