• Sep 20 2024

சூப்பர் கொண்டாட்டத்தில் இணைந்த பாக்கியலட்சுமி சீரியல் குழுவினர்- டீம் என்ன செஞ்சாங்கன்னு பாருங்க!

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முக்கியமான தொடராக ஓடிக் கொண்டிருப்பது தான் பாக்கியலட்சுமி சீரியல். இந்தத் தொடரில் பாக்கியாவாக நடித்துவரும் சுசித்ரா, கோபியாக நடித்துவரும் சதீஷ் மற்றும் ராதிகாவாக நடித்துவரும் ரேஷ்மா ஆகியோரின் ஒரிஜினல் பெயர்களை ரசிகர்கள் மறந்து விட்டார்கள் என்றே சொல்லலாம். அந்த வகையில் அந்தக் கேரக்டராகவே மாறியுள்ளனர்.அந்த வகையில் இவர்களது கதாப்பாத்திரம் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.

தன்னுடைய மனைவி, அழகான 3 பிள்ளைகள் மற்றும் பெற்றோர் என குடும்பம் இருந்தும், ராதிகாவுடன் தனது பழைய காதலை புதுப்பித்துக் கொண்டு வந்த கோபியின் அனைத்து தவறுகளும் அவருடைய வீட்டுக்குத் தெரிந்து விட்டது. இதனால் தற்போது பாக்கியாவுடன் விவாகரத்தானதோடு வீட்டை விட்டும் கோபி வெளியேறி விட்டார்.


அவர்தான் வீட்டை விட்டு வெளியேறி தற்போது போக்கிடம் இல்லாமல் சுற்றி வருகிறார். இதனிடையே அப்பாவின் இந்த நிலைக்கு காரணம் பாக்கியாதான் என்று நினைத்து செழியன் மற்றும் இனியா அவரை வெறுத்து வருகின்றனர்.

இதனிடையே கோபி வீடில்லாமல் வெளியில் வந்து புலம்புவதும், ராதிகாவை பாக்கியாவின் மாமனார், மாமியார் சென்று திட்டிவிட்டு வருவதுமாக எபிசோட்கள் போகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் இந்த சீரியல் 600 எபிசோட்களை கடந்ததாக பாக்கியா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


இதையொட்டி பாக்கியலட்சுமி டீம் அனைவரும் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோவையும் அவர் பகிர்ந்துள்ளார், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரையும் தனித்தனியாக குறிப்பிட்டு வாழ்த்தியுள்ள அவர், ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


Advertisement

Advertisement