விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் 'பாரதி கண்ணம்மா 2'. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தான் இதன் 2-ஆம் பாகம் ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகின்றது. ஆனால் முதல் பாகத்தைப் போன்று எதிர்பார்த்தளவிற்கு 2-ஆம் பாகம் வெற்றி பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.
இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் சம்மந்தி கால் பண்ணினதாகவும் கல்யாணத்தை மண்டபத்தில் தான் வைக்க வேண்டும் என அவர் கூறியதாக கண்ணம்மா வீட்டில் பேசிக் கொள்கின்றனர். இதனைக் கேட்டதும் கண்ணம்மா முகம் சோகத்தில் வாடுகின்றது.
மேலும் பாக்கியம் அந்தளவு பணத்தை எப்படி புரட்டுவது என ஆச்சர்யத்துடன் கேட்கின்றார். மறுபுறம் கண்ணம்மாவின் வீட்டிற்கு வந்த பெரியவர்கள் 'எங்க ஊர் ஐயனாருக்கு திருவிழா எடுக்க ஒரு மரக்குதிரை செய்து தர வேண்டும்" எனக் கூறுகின்றனர். அதனைக் கேட்ட கண்ணம்மாவின் தந்தை எங்களுக்கும் அதுக்கும் சம்மந்தமில்லையே என்கிறார்.
பின்னர் கண்ணம்மாவிற்கு தெரியும் என்றதும் அவரை செய்து தரும்படி கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது கண்ணம்மா நாலு நாளுக்குள் செய்து முடித்து விட்டால் அதற்காக கண்ணம்மாவிற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகின்றோம் எனவும் கூறுகின்றனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது.
Listen News!