விஜய் டிவியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற ஒரு சீரியல் என்றால் அது 'பாரதி கண்ணம்மா' சீரியல் தான். மிகவும் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த சீரியலானது தற்போது முடிவிற்கு வந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சீரியலில் ஆரம்பத்திலிருந்து இயக்குநர் பல டுவிஸ்ட்டுகளுடன் தான் கதைக்களத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார். இதனால் தான் இந்த சீரியலுக்கு ஆரம்பத்திலிருந்து, முடிவடையும் வரை ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது
இருப்பினும் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடையப் போவதால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர். அதுமட்டுமல்லாது "பாரதி கண்ணம்மா 2' சீரியலையும் இயக்குவீர்களா எனக் கேள்விகளையும் கேட்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் இந்த சீரியலின் இயக்குநரான பிரவீன் பெனட் தற்போது தனது இன்ஸ்டா ஸ்டோரி மூலமாக ஒரு பதிவினை வெளியிட்டிருக்கின்றார். அதாவது "பாரதி கண்ணம்மா சீரியல் 2 என்ன பண்ணலாம்" என்பது போல் கேள்வி ஒன்றினை கேட்டிருக்கின்றார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் பிரவீன் பெனட்டின் பதிவினை பார்க்கும் போது கண்டிப்பாக இதன் 2ஆவது பாகம் உருவாகும் என்பது போல் கூறி வருகின்றனர்.
Listen News!