'பாரதி கண்ணம்மா' சீரியலின் முதல் பாகத்தினுடைய வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் 'பாரதி கண்ணம்மா-2' சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. முதல் பாகத்திற்கு எந்தளவு வரவேற்பு கொடுத்தார்களோ, அதே அளவு வரவேற்பை இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சீரியலினுடைய இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் கண்ணம்மாவின் அக்கா சாந்தியும் மணமகன் விக்கியும் மேடையில் அமர்ந்திருக்கின்றனர்.தாலி எடுத்துக் கொடுக்கச் சென்ற பாரதி விக்கியை கழுத்தில் பிடித்து எழுப்பி "இவன் வேலையே ஊர் ஊராக போய்ட்டு பொண்ணுங்கள கல்யாணம் பண்ணிட்டு விட்டிற்று ஓடிறது தான்" எனக் கூறுகின்றார். இதனையடுத்து விக்கியும் தான் அப்பிடியானவன் தான் என்பதை ஒத்துக் கொள்கின்றார்.
பின்னர் அங்கு வந்த போலீசார் விக்கியை கைது செய்து கொண்டு செல்கின்றனர். மறுபுறம் சண்முகம் இனி என் பெண்ணை யார் கல்யாணம் பண்ணுவா எனக் கேட்டு கதறி அழுகின்றார். அதற்கு பாரதி நான் ஒரு மாப்பிள்ளையை கூட்டிற்று வாறன் என்று சொல்லி அன்பை அழைத்து தாலி கட்டுமாறு கூறுகின்றார். அன்பும் சாந்தி கழுத்தில் தாலி கட்டுகின்றார். ஆனால் சாந்திக்கு இதில் சம்மதம் இல்லை என்பதால் அவர் தாலி கட்டும் போது வெறுப்பில் உட்கார்ந்திருக்கின்றார்.
இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.
Listen News!