விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆரம்பமாகிய பாரதிகண்ணம்மா தொடர் மக்கள் மத்தியில் பெரிதும் ரசிக்கப்பட்ட தொடர்.
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த சீரியலாக உள்ள 'பாரதி கண்ணம்மாவில் அடுத்தடுத்து ட்விஸ்ட்கள் நடைபெறுகின்றது.
அதாவது காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பாரதி தனது மனைவியான கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு, அவரை விட்டு பிரிந்து வாழ்ந்த நிலையில் அவர் தவறானவர் இல்லை என்றும் அவருக்கு தான் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது என்ற உண்மையை தெரிந்து கொண்டு அவரிடம் மன்னிப்பும் கேட்கிறார்.
ஆனால் அந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளாத கண்ணம்மா தனது இரண்டு பிள்ளைகளையும் கூட்டிட்டு தனது சொந்த ஊருக்கு வந்துவிடுகின்றார்.இவர்களைத் தேடி வந்த பாரதி அவர்களை கண்டுபிடித்த வேளையில் பஞ்சாயத்தில் சிக்கி இவரை இந்த ஊருக்கு வரவேண்டாம் என கட்டளை போடுகின்றார்கள் ஊர் தலைவர்கள்.
இந்நிலையில் மாஸாக வெளியில் வந்த பாரதி சூப்பராக காரில் பாட்டு போட்டு வந்து இறங்க எல்லோரும் ஷாக்கடைகின்றனர்.மரியாதையாக ஊரைவிட்டு போயிடு எனக் கூற...நான் முன்னை வைத்த காலை பின்னே வைக்க முடியாது என கூறி நான் இந்த ஊரை விட்டு போக மாட்டேன் எனக் கூற இந்த ப்ரமோ முடிலடைகின்றது.
Listen News!