விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலானது தற்பொழுது அதன் இறுததிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் ரசிகர்களும் மிகவும் பரபரப்பாக பார்த்து வருகின்றனர்.
அதாவது வெண்பா பாரதியை ஏமாற்றித் திருமணம் செய்யப் போகின்றார் என்ற விடயம் அனைவருக்கும் தெரிய வர அனைவரும் திருமணத்தை நிறுத்துகின்றனர். அத்தோடு வெண்பா கர்ப்பமாக இருப்பதற்கு ரோஷித் தான் காரணம் என்றும் தெரிந்த விட்டது.
இதனால் பாரதியை அனைத்து குடும்பமும் வெறுத்து ஒதுக்கி விட்டனர். இதனால் பாரதி தனி மரமாக நிற்கின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.
அந்த வகையில் தற்பொழுது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் முடிவு வந்து விட்டது. அதில் ஹேமா லக்ஷ்மி மற்றும் பாரதியின் டிஎன்ஏ மூன்றும் ஒன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் பாரதி அதிர்ச்சிக்குள்ளானதோடு பேசாமல் கண்ணம்மா மற்றும் பிள்ளைகள் என்று இருந்திருந்தால் குடும்பத்தோட நிம்மதியா இருந்திருக்கலாம் என்று பாரதி கதறி அழுகின்றார்.
வெண்பா பேச்சைக் கேட் வீணா வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிட்டோமே என்று அழுகின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது கண்ணம்மா பாரதியை ஏற்றுக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!