விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா.அனைவரும் விரும்பி பார்க்கப்படும் இந்த சீரியல் எப்போது முடியும் என பல ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
இவ்வாறுஇருக்கையில் பாரதி கண்ணம்மா சீரியல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பில் இருந்து கூட சில வீடியோக்கள் வெளிவந்து சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவின.
அந்த வகையில் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த மாதிரி பாரதிக்கு DNA பரிசோதனை மூலம் ஹேமா மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் தனது மகள்கள் தான் என தெரியவந்துள்ளது.
இதனை எண்ணி தான் செய்தது தவறு என கண்ணீர் வடிக்கின்றார் பாரதி.இவ்வாறுஇருக்கையில் வெண்பா இது எல்லாம் பொய் என பாரதியின் மனதை மாற்ற முற்படும் போது துர்கா மற்றும் செல்வம் திடீரென என்றி ஆகி எல்லா உண்மைகளையும் சொல்லி விடுகின்றார்கள்.இதனால் வெண்பா கைது செய்யப்படுகின்றார்.
இந்த நேரம் பார்த்து பாரதி .....என் பொண்டாட்டி ஒரு தெய்வம்...நீ எனக்கு சாமி மாதிரி..என்னை மன்னிச்சு ஏற்றுக்கொள் என கண்ணம்மாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கின்றார்.
பின் பாரதியின் அம்மா பாரதியை எழுப்பி விட்டு அவனை ஏற்றுக்கொள் கண்ணம்மா...எனக் கூறுகின்றார்.இதன் பிறகு நீயும் என் குழந்தைகளும் சந்தோசமாக வாழலாம் எனக் கூறி பிள்ளைகளை கட்டி அணைக்கின்றார் பாரதி.இனி உன்னை பிரிய மாட்டேன் என உறுதி மொழி அழிக்கின்றார்.
இவற்றை எல்லாம் பார்த்து கொண்டு இருக்கும் கண்ணம்மா என்ன முடிவு எடுக்கப்போகிறார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கையில் இன்றைய ப்ரமோ முடிவடைகின்றது.
இதோ அந்த ப்ரமோ...
Listen News!