விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த வேலைக்காரன் தொடரில் முக்கிய கதாநாயகனான நடித்து அசத்தி இருந்தவர் நடிகர் சபரி.இவர் அதற்கு முதல் பல வெப் சீரியல்களிலும் நடித்து வந்துள்ளார்.
தற்போது பாரதி கண்ணம்மா தொடரில் வில்லியான வெண்பாவின் கணவனாக நடித்து வரும் நிலையில் இவர் நடிக்கும் புதிய சீரியல் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இவர் விஜய் டிவியில் புதியதாக ஒளிபரப்பப்படும் பொன்னி எனும் சீரியலில் மெயின் லீடில் நடிக்கப்போகின்றாராம் என தகவல் வெளியாகி உள்ளது.
இவருக்கு ஜோடியாக ராஜா ராணி சீரியல் நடிகை வைசுசுந்தர் நடிக்கப்போகின்றாராம் எனவும் கூறப்படுகின்றது.
இதனை அறிந்த பல ரசிகர்களும் இவர்களுக்கு வாழ்த்து கூறி வரும் நிலையில் சிலர் நீங்கள் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிவிட்டீர்களா கேட்டு வருகிறார்கள்.ஆனால் அவர் அந்த சீரியலில் இருந்து விலகியது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!