தமிழ் சின்னத்திரையில் குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் அருண் பிரசாத். தொடர்ந்து மேயாத மான் போன்ற பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கின்றார். இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது விஜய் டிவி தான்.
இந்த டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பாரதி கதாப்பாத்திரம் இவருடைய கெரியரில் முக்கியமானதாக அமைந்தது. மேலும் இந்த சீரியல் முடிவடைந்ததை அடுத்து இதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகின்றது. ஆனால் இதில் கதாநாயகனாக சிப்பு சூர்யான் நடிக்கிறார்
இந்த நிலையில் அருண் அடுத்தாக என்ன சீரியலில் நடிக்கப் போகின்றார் அல்லது படத்தில் நடிக்கப் போகின்றாரா? என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. இப்படியான நிலையில் அருண் வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று விட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் அருண் எப்போது மீண்டும் நடிக்க வருவீங்க என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!