• Sep 20 2024

நான் தான் கண்ணம்மா என்று போலீஸிடம் பொய் சொன்ன சித்ரா- சௌந்தர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாரதி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்  டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா சீசன் 2. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

அதாவது சித்ராவைக் கொல்ல வந்த வில்லன்கள் ஆள் மாறி கண்ணம்மாவைக் கத்தியால் குத்தி விடுவார்கள்.பின் குத்தியது சித்ரா இல்லை என்று தெரிந்தவுடன் மீண்டும் சித்ராவைக் குத்த வர அங்கிருந்தவர்களும் போலீசும் வர வில்லன்கள் அந்த இடத்தை விட்ட ஓடி விடுவார்கள். தொடர்ந்து அங்கு வரும் போலிசார் சித்ராவிடம் அந்தப் பொண்ணு உன்னோட மடியில தானே இறந்திச்சு யார் அந்தப் பொண்ணு என்று தெரியுமா என்று கேட்கின்றனர்.


அதற்கு சித்ரா கண்ணம்மா தன்னிடம் சொன்ன வார்த்தைகளையும் ஜெயில் வாடர்ன் சொன்ன வார்த்தைகளையும் நினைத்து பார்த்து விட்டு தன்னுடைய பெயர் கண்ணம்மா என்றும் அவ பெயர் சித்ரா என்றும் மாற்றி சொல்லி விடுகின்றார். பின்னர் பாரதிக்கு பொண்ணு பார்ப்பதற்காக அனைவரும் கிளம்ப சௌந்தர்யாவின் அண்ணா வந்து ஒரு வீடியோ காட்டுகின்றார்.

அதில் பாரதி பாஃரில் அடிதடியில் ஈடுபடுகின்றார். இதனைப் பார்த்து சௌந்தர்யா அதிர்ச்சியடைகிறார். மேலும் பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு இந்த வீடியோ அனுப்பப்பட்டதால் அவங்க பாரதியை வேணாம் என்று சொன்னதாக சொல்லுகின்றார்.இதனால் சௌந்தர்யா பாரதியைக் கூப்பிட்டு அட்வைஸ்ட் கொடுக்கின்றார்.


அதற்கு பாரதி நான் இப்படித் தான் இருப்பேன் என்னை மாற்ற முடியாது. நான் இப்படி இருக்கிறது யாருக்கு பிடிக்குதோ அப்படியான பொண்ணைப் பாருங்க என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றார். இதனைப் பார்த்து சர்மிளாவும் விஜய்யும் சந்தோஷமடைகின்றனர். பின்னர் சித்ரா  கண்ணம்மாவின் ஊருக்கு வந்து ஆட்டோக்காரர் ஒருவரிடம் கண்ணம்மா வீட்டைப் பற்றி விசாரிக்கிறார்.

அந்த ஆட்டோக்காரர் வந்திருப்பது கண்ணம்மா என்று நினைத்து கண்ணம்மா போனதில் இருந்து அவளுடைய அம்மா நோய்வாய்ப்பட்டு இருப்பதாக கூறி சித்ராவை ஆட்டோவில் ஏற்றிச் செல்கின்றார். சித்ராவும் யோசிச்சுக்கொண்டே போகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement