• Sep 21 2024

இரத்த வாந்தி எடுக்கும் பாரதியின் அப்பா-உண்மையை உடைக்கும் லட்சுமி– இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. ஒவ்வொரு உண்மைகள் மெல்ல மெல்லமாகத் தெரிய ஆரம்பித்ததால் சீரியலும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த சீரியலில் இன்று என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

திடீரென்று சௌந்தர்யாவின் கணவர் இருமல் அதிகமாக வர பாத்ரூமுக்கு சென்று இரத்த வாந்தி எடுக்கிறார். பிறகு அவர் முகத்தை அலம்பி கொண்டு வெளியே வர சௌந்தர்யா என்னாச்சு என கேட்க எதை எதையோ சொல்லி சமாளித்து விடுகிறார்.

அதன் பின்னர் ஆரம்பத்தில் எப்பயாவது தான் இரும்பல் வரும் லைட்டாக ரத்தம் வரும் ஆனால் இப்போது இரண்டும் அதிகமாக வருகிறது நாட்களை பார்க்க வேண்டும் என முடிவு செய்கிறார். மேலும் இந்தப் பக்கம் ஸ்கூலுக்கு வந்த பாரதி ஹேமாவுக்காக பேரண்ட் டீச்சர் மீட்டிங் அட்டென்ட் செய்து டீச்சரிடம் ஹேமா குறித்து விசாரிக்கிறார்.

இதையெல்லாம் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்த லட்சுமி தனக்காகவும் அப்பாவை மீட்டிங் அட்டென்ட் பண்ண சொல்லலாம் என முடிவு செய்து பாரதி வெளியே வந்ததும் எனக்காகவும் வந்து சாரை பார்த்து பேசிட்டு இருப்பாங்க என சொல்ல உங்க அம்மா வந்து பேசுவாங்க என பாரதி கூறுகிறார்.

ப்ளீஸ் டாக்டர் அப்பா எனக்காக வாங்க என லட்சுமி கூற பாரதி பிராக்ரஸ் காட்டுல உங்க அம்மாவும் அப்பாவும் தான் கையெழுத்து போட வேண்டும் யாரோ ஒருத்தர் நான் வந்து எப்படி போட முடியும் என சொல்லி அங்கிருந்து கிளம்ப அப்பா நீங்க தான் எனக்கு அப்பான்னு எப்பவும் தெரியும். இதை நான் ரொம்ப நாளைக்கு முன்னாடியே கண்டுபிடிச்சிட்டேன் சௌந்தர்யா பார்த்தியிடம் கேட்ட பதில் அவங்களும் ஆமாம்னு சொல்லிட்டாங்க என சொல்ல பாரதி ஷாக்கடைகின்றார்.

அப்பான்னு கூப்பிட்டா உங்களுக்கு கோபம் வரும்னு பாட்டி, அம்மா என எல்லோரும் சொன்னாங்க. எனக்கு ஒன்னும் நீங்க தினமும் அப்பாவா இருக்க வேண்டாம் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் வந்து எனக்காக வந்து கையெழுத்து போடுங்க என லட்சுமி அழுது கூப்பிட பாரதி குழந்தைகிட்ட எப்படி எல்லாம் பொய் சொல்லி வச்சிருக்காங்க இவங்கள சும்மாவே விடமாட்டேன் என மனதுக்குள் பேசிக்கொண்டே அந்த இடத்தை விட்டு கிளம்பி சென்று விடுகிறார்.

மேலும் இந்த பக்கம் வேறொரு மருத்துவமனைக்கு வந்துள்ள வேணு தனக்கு இருக்கும் பிரச்சனை குறித்து பேசி சில டெஸ்ட் கடை எடுக்கிறார். இந்த விஷயத்தை தன்னுடைய வீட்டார் யாரிடம் சொல்ல வேண்டாமென டாக்டர் இடம் கேட்டுக் கொண்டு இந்த இடத்தில் இருந்து கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement