• Sep 20 2024

விஜய் டிவியில் திடீரென நிறுத்தப்படவுள்ள பாவம் கணேசன் சீரியல்- இந்த நிகழ்ச்சியால் தான் முடிவடைகின்றதா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அத்தோடு சில சீரியல்கள் அண்மையில் முடிவடைந்துள்ளதோடு இன்னும் புதிய சீரியல்கள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் அடுத்த மாதம் முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளதால் சீரியல் ஒளிபரப்பாகும் நேரங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு சில சீரியல்கள் முடிவுக்கு வந்துள்ளது.


அந்த வகையில் தற்பொழுது முக்கிய சீரியல் முடிவடையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.அதாவது நவீன் மற்றும் நேகா நடித்து வரும் பாவம் கணேசன் சீரியல் தான் முடிவடையப்போவதாக கூறப்படுகின்றது. இந்த சீரியல் 500 எப்பிஷோட்டுகளை எட்டிய நிலையில் திடீரென முடிவுக்க வருவது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த சீரியல் முடிவடைந்ததைத் தொடர்ந்து கண்ணே கலைமானே என்னும் புதிய சீரியல் ஆரம்பிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement