சின்னத்திரையில் ‘ரெட்டை வால் குருவி, சின்னத்தம்பி போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபல்யமானவர் தான் பாவனி. அதிலும் சின்னத்தம்பி சீரியல் மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் நடித்து வந்தார்
இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், பிரதீப் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் சிறிது காலம் பாவனி மீடியாவில் இருந்து விலகி இருந்தார். இருப்பினும் பிக்பாஸ் 5 இல் பங்கு பற்றியதன் மூலம் ரி என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே பாவனி பல பிரச்சினைகளில் சிக்கினார். இருப்பினும் நன்றாக விளையாடி இறுதிச்சுற்று வரை இடம் பிடித்தார். பிக்பாஸில் வைல்ட் காட் என்ரியாக நுழைந்த அமீர் பாவனிடம் உன்னை காதலிக்கிறேன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனால், பாவனி, அமீரை தம்பி என்று சொல்லியும், இல்லை என்றும் மறுத்து வந்திருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பாவனி- அமீர் இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது, நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, வெளியே சுற்றுவது என்று திரிகின்றார்கள். இதனால் ரசிகர்கள் மத்தியில் இவர்கள் காதலிக்கிறார்களா? என்ற சந்தேகம் எழுந்தது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர்-பாவனி இருவரும் பங்கேற்று நடனம் ஆடி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இவர்கள் நெருக்கத்தைப் பற்றி இருவரும் காதலிக்க தொடங்கி விட்டார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.இந்த நிலையில் பாவனி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில் அவர் ரொமான்டிக்கான கேன்டில் லைட் டின்னர் சாப்பிடும் போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “Humans glow differently when they are treated right and loved properly #feelingloved #happyme” என குறிப்பிட்டிருக்கிறார்.
அத்தோடு அவர் காதலை உணர்கிறேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மற்றொரு போட்டோவில் அமீருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மைன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இப்படி பாவனி பதிவிட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இருவரும் காதலிக்கிறார்கள், மறைமுகமாக அமீர் காதலை பாவனி உறுதி செய்திருக்கிறார் என்றும் கூறி வருகின்றனர்.
Listen News!