• Sep 20 2024

அஞ்சலியின் கன்னத்தைப் பிடித்து முத்தமிட்ட பூமி- நடந்ததைப் பார்த்து கதறி அழும் முத்தழகு- பரபரப்பான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் பல நிகழ்ச்சிகள்மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் மதிய நேரத்தில் ஹிட்டாக ஓடும் முக்கிய சீரியல் தான் முத்தழகு விவசாயம் பார்க்கும் பெண் தவிர்க்க முடியாத ஒரு காரணத்தால் ஊர்த்தலைவியின் மகனான பூமியைத் திருமணம் செய்திருக்கின்றார்.

சில நாட்கள் தனது கணவருடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தார் முத்தழகு. இருப்பினும் பூமி, தான் இறந்து விட்டதாக நினைத்த அவரது முதல் மனைவியான அஞ்சலி மீண்டும் வந்து விடுகின்றார்.


இதனால் பல பிரச்சினைகளை சந்தித்த பூமி எந்த மனைவியுடன் சேர்ந்து வாழப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியகியுள்ளது. அதில் பழைய வீட்டை சுத்தம் பண்ணித் தரச் சொல்லி பூமியின் சித்தி அனுப்பி வைக்க முத்தழகு சுத்தம் பண்ணி வைக்க போகின்றார்.

அங்கே பூமி அஞ்சலிக்காக வைத்திருந்த கிப்டுக்கள் மற்றும் அவர்கள் காதலிக்கும் போது எடுத்த வீடியோக்களையும் பார்த்து அழுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement