மாடலிங் துறையில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மிஸ் தமிழ் நாடு பட்டம் வென்றவர் நடிகை அபிராமி வெங்கடாசலம். இவர் சன் டிவியில் ‘ஸ்டார் வார்ஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி , ‘நோட்டா’ திரைப்படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
அதன் பின்னர், ஹிந்தியில், அமிதாப் பச்சன், டாப்சீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடத்தே தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இதன் மூலம், பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் அதில் நல்ல ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற இவர், வல்லமை தாராயோ என்னும் வெப் சீரிஸ், விஜய் டிவியில் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சி என அவ்வப்போது மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.
எனினும் தற்போது நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வரும் இவர், பெரிய படங்கள் மற்றும் சீரியல்களில் தென்படாத நிலையிலும், தனது சமூக வலைதளபக்கங்களில் லைவ் சாட் மற்றும் புகைப்படங்கள் பதிவிடுவது என ரசிகர்களிடையே ஆக்ட்டிவாக இருந்து வருகின்றார். அவ்வப்போது, சமூக ரீதியான பிரச்சனைகள் குறித்தும் கருத்துக்கள் தெரிவித்து வரும் அபிராமி, ரசிகர்களிடையே applause பெற்று வருகின்றார்.
இதையடுத்து இந்த ஆண்டு தொடக்கத்தில் OTTக்காக பிரத்யேகமாக நடத்தப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார் அபிராமி. அத்தோடு இதில் அவர் தனது முன்னாள் காதலனான நிரூப் உடன் சண்டை போட்டது, சிகரெட் பிடித்தது என ஏராளமான சர்ச்சைகளிலும் சிக்கி தவித்தார்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பின்னர் சில படங்களில் கமிட் ஆகியுள்ள இவர், தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள மற்றும் புது வாய்ப்புகளுக்காகவும் தனது கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் உலாவவிட்டு வருகிறார்.
எனினும் தற்போது மூக்கில் வளையம் போட இன்ஸ்டாகிராமில் வாக்கெடுப்பு நடத்தி உள்ளார். இதில் 58 சதவீதம் பேர் போடுங்கள் என்றும், 42 சதவீதம் பேர் போட வேண்டாம் என்றும் வாக்களித்துள்ளனர். அதிக அளவிலான ரசிகர்கள் போட சொன்னதால் உடனடியாக மூக்கில் வளையம் போட்டுக்கொண்டு அதன் புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் சிலர் இதற்கெல்லாமா வாக்கெடுப்பு நடத்துவீங்களா என ரசிகர்கள் குமுறுகின்றனராம்.
பிற செய்திகள்
- மீனாவின் கணவனின் மரணத்தில் அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் காரணங்கள்... கதறிய மகள்..!
- காலண்டரில் குறித்து வைத்து சூர்யா செய்யும் செயல் – ரகசியத்தை போட்டுடைத்த ஜோதிகா
- நிஜ வாழ்க்கையில் காரில் கடத்தப்பட்ட நமீதா… போலீசாரிடம் சிக்கிய நபர்; நடந்தது என்ன..?
- பாலியல் தொழில் செய்ய சொல்லி மிரட்டல்- துணை நடிகை விடுத்த பரபரப்பு புகார்…!
- நடிகர் தனுஷின் தாய்க்கிழவி பாடலின் மீது எழுந்துள்ள புகார்-காரணம் என்ன தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!