• Sep 21 2024

ஆரம்பமாகிறது Bigg Boss-7... யார் யார் எந்தெந்த வீட்டில் வைக்கப்படுகிறார்கள்..? வெளியானது தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு  என்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பதுஅனைவருக்கும் தெரிந்ததே. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சியானது 6சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 7-ஆவது சீசன் ஆரம்பமாக இருக்கின்றது. சமீபத்தில் இந்த சீசனுக்காக கமல் நடித்த பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருந்தது.


அதுமட்டுமல்லாது இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருக்கப் போவதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மென்மேலும் தூண்டியுள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சி எப்போது ஆரம்பமாகும் என பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அந்தவகையில் செப்டெம்பர் 24ஆம் தேதி அல்லது அக்டோபர் 7-ஆம் தேதி பிக்பாஸ் லான்ஞ் இடம்பெறும் எனவும் கூறப்படுகின்றது. அத்தோடு இந்த சீசனில் மாகாபா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் உட்படப் பலர் கலந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.


இந்நிலையில் தற்போது சூப்பரான அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது ரசிகர்கள் பலரும் எதற்காக இந்த சீசனில் 2வீடுகள் எனக் கேட்டு வந்திருந்தனர். அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. அதாவது ஒரு வீட்டில் ஆண்களும், மற்றைய வீட்டில் பெண்களும் வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையறிந்த ரசிகர்கள் இப்படிப் பிரித்துப் பிரித்து வைத்தால் நிகழ்ச்சி சுவாரஷ்யம் இல்லாமல் இருக்கும் எனவும், ஒரே வீட்டில் ஆண் போட்டியாளர்களையும், பெண் போட்டியாளர்களையும் வைத்திருந்தால் தான் காதல், கலாட்டா எல்லாம் இருக்கும், எனவே நீகழ்ச்சியும் சுவாரஷ்யமாகப் போகும் எனவும் கூறி வருகின்றனர். 


Advertisement

Advertisement