பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 3இல் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபமானவர் அபிராமி வெங்கடாசலம். இவர் இந்த நிகழ்ச்சியில் 56 நாட்கள் இருந்து ரசிகர்களின் பேராதரவுடன் வெளியேறினார்.
பிக்பாஸ் ஷோவில் குறைந்த வாக்குகள் காரணமாக இடையிலேயே வெளியேற்றப்பட்டாலும் இதற்கு முதல் 2016ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தமிழ்நாடு மாடலிங் போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆகவும் தேர்வாகினார்.
இதனை அடுத்து சில நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்த இவர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவ்வாறாக தொடர்ந்து படங்களில் நடித்து வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படவாய்ப்பில்லாததால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார்.
இந்நிலையில் இவர் சமீபகாலமாக இன்ஸ்டாவில் படு ஆக்டிவாக இருந்து வருகின்றார். அதில் எதையாவது பதிவிட்டு வரும் அபிராமி தற்போது தனது சகோதரி ஒருவரின் திருமணப் புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்துக்கூறி இருக்கின்றார்.
இப்பதிவில் அவர் கூறுகையில் "எங்கே தொடங்குவது என்று எனக்கு உண்மையில் தெரியாது , நீ ஒரு ஆசீர்வாதமாக என் வாழ்க்கையில் வந்தாய், பிக்பாஸால் எனக்கு கிடைத்த ஒரு விலைமதிப்பற்ற பரிசு நீ டா... விலைமதிப்பற்ற சகோதரி , நீங்கள் எப்போதும் எனக்கு அளித்த நிபந்தனையற்ற அன்பு என் வாழ்க்கையின் பலங்களில் ஒன்றாகும், எப்போதும் எனக்காக இருந்ததற்கு நன்றி டா, நீங்கள் எனக்கு ஒரு உலகம்" என மிகவும் உணர்ச்சிபூர்வமாக குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார் அபிராமி.
Listen News!