விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் அபிராமி வெங்கடாசலம். ஆனாலும் இவர் சக போட்டியாளரான முகேன் உடன் இடம்பெற்ற கருத்து வேறுபாடுகளின் காரணமாக குறைந்த வாக்குகளை பெற்று 56 நாட்களில் வெளியேறினார்.
மேலும் இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்து தான் பின்னர் 'நோட்டா' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தினை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' என்ற படத்தில் பாத்திமா பாபு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இதன் பின்னர் பெரிதளவில் பட வாய்ப்புக்கள் எதுவும் இல்லாமையினால் தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து தனது கிளாமர் புகைப்படங்களை தாறுமாறாக பகிர்ந்து வருகின்றார்.
இந்நிலையில் தற்போது கழுத்தில் மஞ்சள் கயிற்றுடன் எடுத்த குளோசப் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் திருமணமாகிவிட்டதா என்று கேட்டு வருகின்றனர்.
Listen News!