ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் விதவிதமான டாஸ்க்குகள் வழங்கப்பட்டு வருவதால் போட்டியாளர்களும் சலிப்படையாமல் விளையாடி வருகின்றனர்.
மேலும் 21 போட்டியாளர்கள் பங்குபற்றிய இந்த நிகழ்ச்சியிலிருந்து இறுதியாக நிவாஷினி வெளியேறினார். இவருடன் சேர்த்து மொத்தமாக 6 பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் ஜி.பி முத்து மாத்திரமே தனது பிள்ளைகளுக்காக வீட்டை விட்டு வெளியேறினார்.
அந்த வகையில் இந்த வாரத்திற்கான தலைவருக்கான போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் மைனா நந்தினி வெற்றி பெற்று மீண்டும் தலைவர் ஆனார். ஆனால் தனலக்ஷ்மி இதற்கு நான் சம்மத்திக்க மாட்டேன் எனத் தெரிவித்து அடம்பிடித்த ப்ரோமோ வெளியாகியிருந்ததைக் காணலாம்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த சாந்தி மாஸ்டர் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதாவது சாந்தி மாஸ்டர் மற்றும் அசல் கோலாறு மகேஸ்வரி ஆகியோர் அடுத்த வாரம் ஒளிபரப்ப படவுள்ள ஊ சொல்லுறியா ஊஊ சொல்லுறியா என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். இது குறித்த புகைப்படத்தை தான் அவர் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!