உலக அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'. இந்நிகழ்ச்சியானது முதல் 5சீசன்களை வெற்றிகரமாகக் கடந்துவிட்ட நிலையில் இதன் 6 ஆவது சீசனானது இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் சீசன் 5இல் ராஜூ, பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் ஆகியோர் நிகழ்ச்சியின் இறுதி ஐந்து போட்டியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
மேலும் எந்த மொழியில் எத்தனை பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்தாலும் அதில் ஒரே ஒரு முக்கியமான விஷயம் மட்டும் நடந்துவிடும், அதுதான் காதல். அந்தவகையில் எல்லா சீசன்களிலும் ஏதாவது ஒரு ஜோடி இணைந்துவிடுகிறார்கள். அவ்வாறாக 5ஆவது சீசனில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு ஜோடி தான் பாவனி-அமீர்.
இவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் இணைந்து பணிபுரிந்தார்கள். அத்தோடு அதில் டைட்டிலையும் வென்றுவிட்டார்கள். அதுமட்டுமல்லாது அண்மையில் நடிகை பாவனியும் தனது காதலை அமீருக்காக வெளிப்படுத்தினார்.
பாவனி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தாண்டி சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருபவர். அந்தவகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றானது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்றது. அதாவது அதில் அவர் கையில் கிளாசுடன் இருக்கின்றார்.
அத்தோடு இப்பதிவில் "ஒரு காலத்தில் ஒரு பெரிய கிளாஸ் மதுவுக்கு தகுதியான உண்மையான நண்பர்கள் இருந்தனர், அது நாமாக இருந்தோம்" எனக் குறிப்பிட்டு இருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாமல் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
Listen News!