புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த பிக்பாஸ் பிரபலத்தின் தாயார் மரணமடைந்ததை அடுத்து ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் ராக்கி சாவந்த். இவர் பாலிவுட் படங்களில் நடித்து பாப்புலர் ஆனதை விட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தான் பாப்புலர் ஆனார். இவர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானார். அத்தோடு மராத்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
மேலும் இவர் இந்தி மட்டுமின்றி கன்னடா, மராத்தி, தெலுங்கு, ஒடியா போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு தனக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தியது பேசுபொருள் ஆனது.
இந்நிகழ்ச்சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ரித்தேஷ் என்கிற வெளிநாட்டு வாழ் இந்தியரை திருமணம் செய்துகொண்டார் ராக்கி சாவந்த். மேலும் இவர்களின் திருமண பந்தம் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்
முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து, கடந்த சில வாரங்களுக்கு முன் அடில் துரானி என்பவரை திருமணம் செய்துகொண்டார் ராக்கி சாவந்த். திருமணமான பத்தே நாட்களில் நடிகை ஷெர்லின் சோப்ரா கொடுத்த புகாரின் பேரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் ராக்கி சாவந்த். அத்தோடு சில நாட்கள் சிறைவாசத்துக்கு பின் விடுதலை ஆகி வெளியே வந்தார்.
எப்போதும் தான் ஒரு பேசுபொருளாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இவர் அரசியலிலும் களமிறங்கினார். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு படுதோல்வி அடைந்த அவர், வெறும் 15 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
நடிகை ராக்கி சாவந்தின் தாய் ஜெயா பேடா கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இவ்வாறுஇருக்கையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாய் மரணமடைந்ததை அடுத்து கதறி அழுத ராக்கி சாவந்துக்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். ராக்கி சாவந்தின் தாயார் மறைவுக்கு ஏராளமான பாலிவுட் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!