விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மட்டுமன்றி அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் விரைவில் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுவார்கள்.
அவ்வாறாக அதிகளவான ரசிகர் கூட்டத்தைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'பிக்பாஸ்'. இது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது 6-ஆவது சீசன் ஆரம்பமாக இருக்கின்றது. இந்த 5 சீசன்களிலும் அதிகளவிற்கு ரசிகர்களின் மனங்களை கவர்ந்த சீசன் என்றால் அது 3 ஆவது சீசன் தான்.
அதில் பங்குபற்றிய போட்டியாளர்களையும் சரி, அங்கு இடப்பெற்ற சம்பவங்களையும் சரி யாராலும் எளிதில் மறந்து விட முடியாது.
அதிலும் குறிப்பாக கவின், முகேன், சாண்டி, லொஸ்லியா, தர்சன் ஆகியோரின் செயற்பாடுகள் இன்றும் நம் மனதில் நீங்காத இடத்தினைப் பிடித்து நிற்கின்றன. இவர்கள் 5 பேரும் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும் அந்த வீட்டில் வாழ்ந்திருக்கின்றார்கள்.
இந்நிலையில் பிக்பாஸ் தர்சன் நேற்றைய தினம் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடி இருக்கின்றார். இதற்குப் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், சாண்டியின் வாழ்த்துப் பதிவானது ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கின்றது.
அதாவது பிக்பாஸ் வீட்டில் இடம்பெற்ற ஸ்கூல் சம்பவத்தின் புகைப்படம் ஒன்றினைத் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு தர்சனுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றார்.
அந்த புகைப்படத்தில் இவர்கள் இருவரும் கோமாளி தோற்றத்தில் காட்சி அளிக்கின்றார்கள். இதனைப் பார்த்த ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தத்தோடு அவர்களின் நட்பிற்கு பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!