பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் மன்னர் ஆட்சி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய தினம் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தமக்குக் கொடுக்கப்பட்ட வேடங்களை அணிந்து வந்துள்ளனர்.
அதன்படி பிக்பாஸ் வீட்டை ராயலட மியூசியமாக மாற்றியுள்ளனர். ராஜாவாக ராபேட் மாஸ்டரும் ராணியாக ரச்சிதாவும் படைத்தளபதி அசீமுடன் சேர்ந்து வீட்டிற்குள் வருகின்றனர்.
அங்கே தம்முடைய பொருட்கள் ஒழுங்காக பாதுகாக்க வைக்கப்பட்டுள்ளதா என்பதனைப் பார்வையிடுகின்றனர்.
பின்னர் பிக்பாஸ் வீட்டில் சாப்பிடும் போது உப்பு அதிகமாக இருப்பதாக ரச்சிதா கூற ராஜாவான ராபேட் மாஸ்டர் கோபப்படுகின்றார்.
இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதோடு இது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!