• Sep 20 2024

மிஸ் பன்னாட்டு அரசி 2022 பட்டத்தைப் பெற்ற பிக்பாஸ் நமீதா மாரிமுத்து

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி முடிவடைந்த ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 5 சீசன்களைக் கடந்துள்ளது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 5இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் நமீதா மாரிமுத்து.

திருநங்கையாக இவர் மாடலிங் துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.இந்த நிலையில் திருநங்கைகளுக்கான மிஸ் பன்னாட்டு அரசி 2022 போட்டி தாய்லாந்தில் நடந்தது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த திருநங்கை நமீதா மாரிமுத்து கலந்துகொண்டு முதல் 10 இடத்தில் இடம்பெற்றது மட்டுமில்லாமல் இறுதி போட்டியில் மிஸ் பாப்புலர் வோட் ஆப் வேர்ல்டு விருது பெற்றார்.

அவர், தங்க கோப்பை விருதும், பெற்றதோடு SASHES எனப்படும் அங்கி அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இந்த விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.தங்க கோப்பையை நேற்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் தலைமை செயலகத்தில் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இந் நிகழ்ச்சியின்போது சமூக நலத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிக்கர், சமூக நலத்துறை இயக்குநர் ரத்னா, சமூக பாதுகாப்பு துறை இயக்குநர் வளர்மதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு இணைச் செயலாளர் சீத்தாலட்சுமி உடனிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement