தமிழ் சினிமாவில் ரெட்டைச்சுழி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ஆரி அர்ஜுன்.இருப்பினும் இப்படம் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இதனை அடுத்து ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான நெடுஞ்சாலை படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.பின்னர் நயன்தாரா உடன் சேர்ந்து மாயா என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். இருப்பினும் மக்கள் மத்தியில் இவரைப் பிரபல்யமாக்கியது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் நேர்மையாக விளையாடி டைட்டில் வின்னராகவும் தேர்வாகினார்.
இதனை அடுத்து உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.தற்போது இவர் கைவசம் அலேகா, பகவான், டி.என் 43 என மூன்று படங்கள் உள்ளன. இவை விரைவில் ரிலீஸ் ஆக இருக்கின்றன. ஆர் கடந்த கடந்த 2015ம் ஆண்டு இலங்கை தமிழ் பெண்ணான நதியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த ஜோடிக்கு கடந்த ரியா என்கிற பெண் குழந்தையும் உள்ளது.இந்நிலையில், தான் தற்போது மீண்டும் தந்தையாகி உள்ளதாக நடிகர் ஆரி அர்ஜுனர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் ,பிரபலங்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!