விஜய் டிவியில் ஹிட்டாக ஓடி முடிவடைந்த ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை 5 சீசன்கள் கடந்துள்ளது.அந்த வகையில் 5வது சீசனில் பங்கு பற்றி டைட்டில் வின்னராகத் தெரிவு செய்யப்பட்டவர் தான் ராஜு.
இவர் இதனைத் தொடர்ந்து பி பி ஜோடிகள் நிகழ்ச்சியையும் ராஜு வீட்டில பார்ட்ரி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றார். அதிலும் ராஜு வீட்டில பார்ட்ரி ஷோவில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சீரியல் குழுவினர் வந்து செல்கின்றனர்.
அந்த வகையில் நேற்றைய தினம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள் வருகை தந்திருந்தனர். அவர்களுடன் சுவாரஸியமாக ததகவல்களைக் கேட்டு அறிந்தார் ராஜு. இதனைத் தொடர்ந்து இவர் கூறிய விடயம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கான ஆடிசன்ஸ் நடக்கும் போது கதிர் மற்றும் ஜுவா கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கும் ஆடிசன்ஸ் போனாராம். ஆனால் இயக்குநர் முகத்தில நடிப்பு வரலையே என ராஜுவை வேணாம் என்று விட்டாராம்.
அதனைத் தொடர்ந்து தான் கதிர் கதாப்பாத்திரத்தில் நடிக்க குமரன் தெரிவாகினாராம். ஆனால் சீரியல் பாக்கும் போது குமரனுக்கும் நடிப்பு வரல அப்புறம் எப்படி எடுத்தாங்க என்று ராஜு கூறி அவங்கள கலாய்த்ததும் குற்ப்பிடத்தக்கது.
Listen News!