தமிழ் சினிமாவில் திரைப்பட நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட கலைஞர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பார்த்திபன். அதுமட்டுமன்றி இவர் பிரபல இயக்குநரான கே.பாக்கியராஜிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கின்றார். இவர் நடித்த படங்களில் 'தையல்காரன், உன்னை வாழ்த்தி பாடுகிறேன், பாரதி கண்ணம்மா, அரவிந்தன், புதுமை பித்தன், உன்னை கொடு என்னை தருவேன், வெற்றி கோடி கட்டு' உள்ளிட்ட படங்கள் இன்றும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை.
இவ்வாறாக பல படங்களை இயக்கியும், நடித்தும் வந்த நடிகர் பார்த்திபனின் இயக்கத்தில் தற்போது "இரவின் நிழல்'என்ற திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்தப்படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் என்று அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் 'இரவின் நிழல் படத்திற்கு முன்பே சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் வெளியாகி விட்டது" என சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் கடுமையாக விமர்சித்திருக்கின்றார். அதாவது இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் "கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகிய ஈரானிய திரைப்படமான ‘Fish and Cat' என்ற திரைப்படம் தான் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம், இதை உலக சினிமா பத்திரிகைகள் ஏற்றுக் கொண்டது" என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறாக உலகின் முதல் நான்லீனியர் திரைப்படம் இரவில் நிழல் அல்ல என்று ப்ளூ சட்டை மாறன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி இதற்கான ஆதாரங்களையும் இவர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ப்ளுசட்டை மாறனின் இந்த விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் ரசிகர்களினால் கடுமையான எதிர் விமர்சனங்களிற்கு ஆளாக்கப்பட்டது. அதுமட்டுமன்றி ஒரு சிலர் ப்ளுசட்டை மாறனின் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும், எரித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன.
இந்த நிலையில் 'இரவின் நிழல்' படம் தொடர்பான விமர்சனங்கள் மாறி மாறி மக்கள் மத்தியில் எழுந்து வருகின்ற நிலையில் இந்த பிரச்சனையின் அடுத்த கட்டமாக தற்போது நடிகரும் இயக்குநரும் ஆகிய பார்த்திபன் ஆடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளதாகவும் அந்த ஆடியோவில் பார்த்திபன் தன் தரப்பு விளக்கங்களை அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதாவது அந்த ஆடியோவில் அவர் “ஒரு தயாரிப்பாளர் தன் படத்தை பாஸிட்டிவ்வாக விமர்சனம் செய்ய ப்ளு சட்டை மாறன் 3 லட்சம் ரூபாய் கேட்டதாக என்னிடம் கூறினார்” என்று கூறியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
பார்த்திபன் இவ்வாறு கூறியுள்ளமை ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதாவது ப்ளூ சட்டை மாறன் 'இரவின் நிழல்' திரைப்படத்தை பற்றி விமர்சிப்பதும் அதற்கு பார்த்திபன் எதிர்க்கருத்து தெரிவிப்பதுமாக கடந்த ஓரிரு தினங்களாக இந்த சர்ச்சை தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.
பிற செய்திகள்
- சிம்புவின் போஸ்டரை அகற்றிய போலீஸார்…காரணம் என்ன..?
- மேடையில் வைத்து திடீரென தனது இரண்டாவது மனைவிக்கு முத்தமிட்ட கமல்…இணையத்தை கலக்கும் வீடியோ…!
- “நாங்க கல்யாணம் செய்துக்கப் போறோம்’னு சொல்ல கொஞ்ச நாள் ஆகலாம்”; சீரியல் நடிகை தீபா
- 20 ஆண்டுகளிற்குப் பின்னர் மீண்டும் இணைந்த காதல் ஜோடி…வைரலாகும் புகைப்படங்கள்…வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!
- பிரசாந்தின் வெற்றிக்கு காரணம் வடிவேலு தான்…நம்ப முடியலயே…எதற்காக இப்படி சொல்லுறாங்க..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!