திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை பரினீதி சோப்ரா.
இவர் தன்னுடைய முதல் திரைப்படமாக 2011 ஆம் ஆண்டில் வெளியான பெண்கள் எதிர் ரிக்கிபாய் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுகள் பெற்றார். மேலும் அந்தத் திரைப்படத்திற்காக சிறந்த பெண் துணைக் கதாப்பாந்திரத் தேர்விற்காக பரிந்துரை செய்யப்பட்டார்.
இவ்வாறு முதல் படமே ஹிட் கொடுத்ததால் அடுத்தடுத்து படங்கள் நடித்து ஹிட் கொடுத்து வருகின்றார்.இந்நிலையில் இவர் அடிக்கடி நடத்தும் போட்டோசூட் ரசிகர்களிடத்தே வைரலாகி விடும்.
அந்த வகையில் தற்போது கறுப்பு நிற சேலையில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை அள்ளிக்குவித்து வருகின்றனர்.
Listen News!