பாரதிராஜா இயக்கிய ’கண்களால் கைது செய்’ என்ற தமிழ் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ரி கொடுத்தவர் தான் நடிகை பிரியாமணி. அதன் பின்னர் ஒருசில தமிழ் நடித்து வந்த நடிகை பிரியாமணி, தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்தார்.
இவ்வாறுஇருக்கையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரியாமணி.மேலும் 2006 ஆம் ஆண்டு இயக்குனர் அமீரின் 'பருத்திவீரன்' படத்திற்க்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றார் பிரியாமணி.
கார்த்தியின் முதல் திரைப்படமான இந்த படத்தில் முத்தழகாக மிரட்டலான நடிப்பினை தந்திருந்தார்.அத்தோடு அச்சுஅசல் கிராமத்து பெண்ணாக பருத்திவீரன் திரைப்படத்தில் வலம் வந்து பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவாரென எதிர்பார்க்கப்பட்ட நடிகை பிரியாமணி, எனினும் அதன்பின்னர் ஒருசில படங்களில் நடித்து தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போனார். நீண்ட இடைவெளிக்கு பின், அசுரன் பட ரீமேக்கில் நடித்தார். தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான நடிக்கும் ‘ஜவான்’ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரியாமணி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், தமிழ் திரையுலகில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார். அதாவது சில நடிகைகள் வலுக்கட்டாயமாக கிளாமர் ரோலுக்கு தள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பாலிவுட் நடிகைகளுக்கு இருக்கும் உடல்வாகு வேறு, தமிழ் நடிகைகளுக்கு இருக்கும் உடல்வாகு வேறு. இருப்பினும் வேண்டும் என்றே நடிகைகள் கிளாமர் சீன்களில் நடிக்க கட்டாயப்படுத்தப்படுவதாகவும், தற்போது அந்த நிலைமை கொஞ்சம் மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த வெளிப்படையான பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிற செய்திகள்
- ஒரே படத்தில் இணையும் முன்னணி நான்கு நடிகைகள்-யாருடைய படத்தில் தெரியுமா..?
- அண்ணா என்று கூப்பிடாதே.. பிரபல பெண் நடிகையிடம் கெஞ்சிய சூர்யா…!
- 65 வயது நடிகருக்கு ஜோடியாக மீனா: அவரே வெளியிட்ட பதிவு..!
- சூரரைப்போற்று சூர்யாவின் அப்பா திடீர் மரணம்: வெளியான அதிர்ச்சிக் காரணம்!
- குக்வித் கோமாளி சிவாங்கியின் முதல் சம்பளம் இவ்வளவு தானா..? அதுகும் அவருக்கு கிடைக்கலையாம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!