மீடியாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் வந்தவர் தான் சீரியல் நடிகை லாவன்யா.இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இவர் மாடலிங்,நடிப்பு என பல்வேறு கோணத்தில் தனது திறமையை வெளிக்கொணர்ந்து வருகின்றார்.
இவ்வாறுஇருக்கையில் இவரின் பேட்டி ஒன்று இணையத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அதாவது இவர் முதல் சிப்பிக்குள் முத்து சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.அதில் ஒரு மாற்றுத்திறனாளி பையனை தான் அந்த சீரியலில் திருமணம் செய்கின்றார்.அது பேலவே தனது நிஜ வாழ்க்கையிலும் மாற்றுத்திறனாளி பையனைத் தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவாதாகவும் சொல்லியுள்ளார்.அதாவது இதற்காக தனது தந்தையிடம் தான் சண்டை இட்டுவருவதாகவும் கூறியுள்ளார்.
ஏன் அப்படி எனக்குள் இந்த ஆசை வந்துச்சு என்றால் சின்ன வயசில நான் பார்த்த ஆண்கள் யாருமே சரியில்லை. அப்ப ஆண்களால சில விஷயங்களை நான் எதிர்கொண்டேன்.
அதனால எனக்கு ஆம்பளைங்களை கண்டால் பிடிக்காது. என் காலேஜ்ல ஒரு மாற்றுத்திறனாளி பையனை சந்திச்சேன். அப்பதான் அப்படியான ஒருவரை திருமணம் செய்துக்கணும்னு நினைச்சேன்.என மனம் திறந்து பேசியுள்ளார்.
Listen News!