மணிரத்னம் இயக்கத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ரியாஸ் கான், ஜெயராம், ஜெயசித்ரா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, ஷோபிதா துலிபலா, கிஷோர், அஸ்வின், அர்ஜூன் சிதம்பரம், ரஹ்மான், மோகன் ராம் என பல நட்சத்திரப் பட்டாளங்களின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
ரூ.800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடைபெற்றது. அதன்படி இதன் முதல் பாகமானது செப்டெம்பர் 30ம் திகதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவானது இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில், 5மொழிகளில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரெய்லரை தமிழில் கமல்ஹாசன், ஹிந்தியில் அனில் கபூர், மலையாளத்தில் பிருத்திவிராஜ், தெலுங்கில் ரானா டகுபதி மற்றும் கன்னடத்தில் ஜெய்ந்த் கைகினி ஆகியோர் ஒரே நேரத்தில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளதுமு் குறிப்பிடத்தக்கது.
Listen News!