• Sep 20 2024

'நடிகர்களின் பிள்ளைகள் வேக வைத்த முட்டைகள்'-சர்ச்சைக்குரிய கருத்தினைப் பதிவிட்ட கங்கனா ரனாவத்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவர் நடிப்பில் இறுதியாக தலைவி என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது லாக் அப் என்னும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகின்றார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவிட்டு வருவார். இந்த நிலையில் தற்போது மீண்டும் இவர் பாலிவுட் திரையுலகை பற்றி பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். தென் இந்திய நடிகர்கள் தங்கள் ரசிகர்கள் உடன் இணைந்து இருக்கும் விதத்தை கங்கனா பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், " தென்னிந்திய சினிமாவில் நடிகர்கள் தங்கள் ரசிகர்களுடன் இணைந்து இருக்கும் விதம் மிகவும் வலுவானது. ரசிகர் என்பதை தாண்டி அவர்களின் இணைப்பு அதை விட அதிகம். அதே நேரத்தில் இங்குள்ள நட்சத்திரங்களின் குழந்தைகள் படிப்பை முடிக்க வெளிநாடு செல்கிறார்கள்.

அவர்கள் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்க்கிறார்கள். எனவே, அவர்கள் இங்குள்ள மக்களுடன் எவ்வாறு இணைவார்கள்? அவர்கள் "வேகவைத்த முட்டைகளைப்" போல தெரிகிறார்கள்.

அவர்களின் முழு தோற்றமும் மாறிவிட்டது. பின்னர் அவர்கள் நடிக்க வந்தால் எவ்வாறு அவர்களால் மக்களுடன் தொடர்பு கொள்ள முடியும். நான் யாரையும் கிண்டல் செய்ய விரும்பவில்லை, ”என கங்கனா தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement