தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் முக்கியமான நடன இயக்குநராக வலம் வருபவர் தான் பிருந்தா.
அண்மையில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் இந்த அளவிற்கு வெற்றிபெற முக்கியமான காரணமாக இருந்தது பிருந்தா மாஸ்டரின் நடனம் இயக்கம் என்று தான் கூறவேண்டும்.
அதே போல் அடுத்த வாரம் வெளிவரவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு கூட பிருந்தா மாஸ்டர் தான் நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.
நடன இயக்குனராக மட்டுமின்றி ஹே சினாமிகா எனும் படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். மேலும் இப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
இவ்வாறுஇருக்கையில் பிருந்தா மாஸ்டர் தனது கணவர் மற்றும் மகன்களுடன் வெளிநாட்டிற்கு விடுமுறை நாட்களை கொண்டாட சென்றுள்ளார்.
அங்கிருந்து எடுத்துக்கொண்ட தன்னுடைய குடும்ப புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பிருந்தா மாஸ்டர் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..
Listen News!