தென்னிந்திய சினிமா வரலாற்றில் கடந்த 20 ஆண்டுகளாக ஹீரோயினாக மட்டும் நடித்து வரும் நடிகை தான் த்ரிஷா. இவர் விஜய் அஜித் ரஜினி கமல் விஷால் எனப் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இது தவிர கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.அந்த வகையில் அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகிய 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
இந்தக் கதாப்பாத்திரம் மூலம் தமிழில் மீண்டும் ரி-என்ட்ரி கொடுத்துள்ளார்.இந்நிலையில், த்ரிஷா தனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் வெகேஷன் கேன்சலாகிவிட்டது என்று புகைப்படத்துடன் ஸ்டோரி பதிவிட்டிருந்தார். த்ரிஷாவின் வலது காலை சுற்றி பெரிதாக போடப்பட்டுள்ள பேண்டேஜ் புகைப்படத்தை பார்த்து 'எங்க செல்லத்துக்கு என்ன ஆச்சு? ஏன் இவ்ளோ பெரிய கட்டு?' என கேட்டு வருகின்றனர்
மேலும் சில ரசிகர்கள் வடிவேலு ஸ்டைலில்,'உடைஞ்சது அவங்க கால் எலும்பு இல்ல, எங்களோட குட்டி நெஞ்சு சாரே' என ஹார்ட் ப்ரோக்கன் எமோஜிகளுடன் பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!