தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.
அதன்படி சினிமா பிரபலங்கள் பலரின் கதாபாத்திரமாக போட்டியாளர்கள் மாறி நடிக்க வேண்டும் என்பது தான் இந்த வார டாஸ்க்காக உள்ளது. அப்படி இருக்கையில், போட்டியாளர்களுக்கு காசும் பிக்பாஸ் கொடுத்து இருக்கிறார். எந்த போட்டியாளர் நன்றாக நடனம் ஆடி நடிக்கிறார்களோ அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் அது.
கதிரவன், ரச்சிதா, ஜனனி, தனலட்சுமி, அசீம் உள்ளிட்ட பல போட்டியாளர்களின் நடனமும் அதிக கவனம் ஈர்த்திருந்தது. ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு சினிமா கதாபாத்திரங்கள் போல பிக்பாஸ் வீட்டில் உலா வருகின்றனர்.
இதற்கு மத்தியில், விக்ரமன் மற்றும் ராம் ஆகியோர் இடையே நடந்த உரையாடல் குறித்த விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.ராமிடம் பேசும் விக்ரமன், "எனக்கு ஒரு தப்பு கண்ணுக்கு தெரியுது" என கூறியதும் என்ன தப்பு என ராம் கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் விக்ரமன், "Buzzer அடிச்சாலும் தனக்கு ஃபேவரைட் ஆன ஆள மட்டும் தான் கூப்பிடுறாங்க" என கூறுகிறார்.
இதனைத் தொடர்ந்து பேசும் ராம், "தம்பி இது இந்த டாஸ்க்ல இல்லப்பா. கடைசி 7 வாரமா இதான் நடந்துட்டு இருக்கு. அவங்க ஃப்ரண்ட்ஸ்க்கு மட்டும் Best Performer குடுக்குறாங்க. அவங்களே எல்லாத்தையும் வாங்கிட்டு போயிடுறாங்க. அத பத்தி கேட்க சரியான வாய்ப்பு இது" என்றும் தெரிவிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!