கடந்த 1997ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகிய நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் சூர்யா. பிரபல நடிகர் சிவகுமாரின் மகன் என்ற அடையாளத்தோடு அறிமுகமாகினாலும் தனது விடாமுயற்சியினாலும் அயராத உழைப்பினாலும் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
தொடர்ந்து காதல் திரைப்படங்களில் நடித்து வந்த அவர் காக்க காக்க திரைப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹுரோவாக அறிமுகமாகினார்.தொடர்ந்து கஜினி வேல் ஆதவன் அயன் 7ம் அறிவு சிங்கம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
அத்தோடு இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய ஜெய்பீம் சூரரைப் போற்று போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அதிலும் கமல் நடிப்பில் வெளியாகிய விக்ரம் படத்தில் ரோலெக்ஷ்ஸ் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.
இந்த நிலையில் சூர்யா சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 25வது ஆண்டினைக் கடந்துள்ளது.இதனை அடுத்து சூர்யா 25 என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ,நடிகர் சூர்யாவின் 25 ஆண்டுகள் சினிமா பயணத்தைக் குறிப்பிட்டு, அவரது தம்பி கார்த்தி,பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் இரவும் பகலு உழைத்து தன் மைனஸ்களையே பிளஸாக்கிக் கொண்டார்.அவர் சாதிப்பதையே தன் லட்சியமாக்கிக் கொண்டார். அவர் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் மனதில் இடம்பிடித்துள்ளார்.அவர் என் சகோதர்'' என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு சூர்யா, தனது டுவிட்டர் பக்கத்தில்,''வந்தியத் தேவா, அண்னானா பொறந்திட்டு, பட்ற பாடு இருக்கே'' என்று நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார். இவர்களின் பதிவு வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!