• Sep 21 2024

'மறக்க முடியவில்லை'- மயில்சாமியின் மறைவைத் தொடர்ந்து இணையத்தில் வெளியாகும் சீக்ரெட்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தன்னுடைய நகைச்சுவை கலந்த பேச்சினாலும், நடிப்பினாலும் பல்லாயிரக்கணக்கான மக்களை சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் திடீர் மரணம் அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இறுக்கின்றது. இவரின் மரண செய்தி அறிந்து தமிழ் சினிமாவே பேரதிர்ச்சியில் மூழ்கி உள்ளது. 


சினிமாவைத் தாண்டி நடிகர் மயில்சாமிக்கு அழகிய குடும்பம் ஒன்றும் இருக்கின்றது. அதாவது கீதா என்கிற மனைவியும், யுவன் மற்றும் அன்பு என்கிற மகனும் உள்ளனர். இந்நிலையில் இவரின் மரணத்தை தொடர்ந்து இதுவரை யாருமே பார்த்திடாத இவரது அழகிய குடும்பப் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் இருக்கினறன.


நடிகர் மயில்சாமியின் மூத்த மகன் அன்பு, சினிமாவில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். அந்தவகையில் இவர் நடித்த 'அல்டி' என்ற திரைப்படம் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியானது. இதன்பின் அவர் நடிப்பில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய அளவில் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.


அதேபோன்று மயில்சாமியின் இளைய மகன் பெயர் யுவன். இவரும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். அதாவது இவர் நடிப்பில் 'தண்டகாரண்யம்' என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை பா.இரஞ்சித் தயாரிப்பதோடு, அதியன் ஆதிரை இயக்குகிறார். 

மேலும் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் யுவன் மயில்சாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த நேரத்தில் மயில்சாமி தனது மனைவி கீதா உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் வெளியாகி இருக்கின்றது. இந்த புகைப்படத்தை அவரின் மகன் யுவன் மயில்சாமி தான் எடுத்துள்ளார். இது மயில்சாமியின் திருமண நாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரிகின்றது.


அத்தோடு மயில்சாமி தனது மகன்கள் மீது அதீத அன்பு வைத்திருக்கின்ற ஒருவர். அந்த வகையில் தனது இளையமகன் யுவனுக்கு பெரிய மாலையை அணிவித்து அவருடன் அழகாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் ஒன்றும் வெளியாகி இருக்கின்றது.


மேலும் மயில்சாமியை நாம் பெரும்பாலும் வேட்டி சட்டையில் தான் பார்க்க முடியும். அவர் கோர்ட் சூட் போட்டு, மகனுக்கு இணையாக அவருடன் இணைந்து ஸ்டைலாக போஸ் கொடுத்த அழகிய புகைப்படம் ஒன்றும் வெளியாகி இருக்கின்றது.


அத்தோடு மயில்சாமி சினிமாவில் பெரிய நடிகராக இருந்தாலும், எளிமையான வாழ்க்கையை தான் அவர் வாழ்ந்து வந்துள்ளார். பெரும்பாலும் மக்களோடு மக்களாகவே இருக்க விரும்பும் மயில்சாமியின் எளிமைக்கு எடுத்துக்காட்டாகவும் ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கின்றது.


இவ்வாறாக மயில்சாமியின் மறைவைத் தொடர்ந்து அவர் குறித்த விடயங்கள், புகைப்படங்கள் , வீடியோக்கள் பலவும் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன.

Advertisement

Advertisement