சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான எதிர்நீச்சல் சீரியலில் இந்தம்மா ஏய் என்ற ஒற்றை வசனத்தை பேசி ரசிகர்களை கவர்ந்தவர் மாரிமுத்து. சினிமாவில் கிடைக்காத பேரும், புகழும் இந்த சீரியல் வாயிலாக அவருக்கு கிடைத்தது. குறிப்பாக எதிர்நீச்சல் சீரியலில் இவர் பேசும் ஒவ்வொரு வசனமும் ரசிகர்களிடையே அவ்வளவு பிரபலம்.
கிட்டத்தட்ட எதிர்நீச்சல் சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாரிமுத்துவை சொல்லலாம்.இந்நிலையில் தான் கடந்த இருதினங்களுக்கு முதல் எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசும் போது மாரிமுத்துவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் தனது காரை தானே எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.அவரின் திடீர் மறைவு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனையடுத்து சின்னத்திரை பிரபலங்கள், திரையுலகினர் பலரும் கண்ணீர் மல்க மாரிமுத்துவின் மறைவிற்கு அஞ்சலி தெரிவித்தனர்.அத்தோடு அவரது ஊரில் நேற்றைய தினம் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் பேசும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு ஸ்டுடியோவை விட்டு வெளிய வந்து மருத்துவமனை செல்ல மாரிமுத்துவே காரை ஓட்டி செல்லும் சிசிடிவி காட்சிகள் இடம்பெற்ற வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகியது. இதனை அடுத்து எதிர்நீச்சல் சீரியலுக்காக அவர் பேசிய கடைசி வசனம் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!