நடிகர் அஜித்தின் நடிப்புத் திறமையை மனதாரா பாராட்டி இருக்கின்றாராம் விஜயகாந்த். இது குறித்து சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்டு வருவதைக் காணலாம்.
அதாவது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகர் அஜித். இவர் எச்.வினோத் மற்றும் போனிகபூருடன் மூன்றாவது முறையாக இணைந்து ஏ.கே61 என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவும் உள்ளது.
இப்படத்தின் முற்கட்டப்படப்பிடிப்பானது அண்மையில் நிறைவடைந்திருந்தது.இதனை அடுத்து இரண்டாம் கட்டப்படப்பிடிப்பில் கதாநாயகியாக நடிகை மஞ்சு வாரியார் இணைந்துள்ளதாக கூறப்படுகின்றது.இன்னும் அஜித் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இப்படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் பங்காக்-ல் நடக்கும் என சொல்லப்படது. இந்நிலையில் ந கேப்டன் விஜயகாந்த் அஜித்தை பாராட்டி பேசிய விடயம் தற்பொழுது வைரலாகி வருகின்றது.அதாவது சில வருடங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் ஒன்றுகூடி உண்ணாவிருதம் போராட்டத்தை நடத்திருந்தனர்.அதில் விஜயகாந்த் அஜித்திடம் மிகவும் அதிக உரையாடல் நடத்தியதை அனைவரும் பெரிய விஷயமாக பேசினார்கள்.
அப்படி அவர் அஜித்திடம் என்ன பேசினார் என்றால் பில்லா படத்தை பாராட்டினராம்.இந்த ட்ரெண்டுக்கேத்த சரியான படங்களை சக்சஸ் பண்றதை பாராட்டினாராம் என்றும் கூறப்படுகின்றது. மேலும் விஜயகாந்த் அண்மையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்து தற்பொழுது பூரண குணமடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!