• Sep 20 2024

வலைப்பேச்சு அந்தணனின் பெயரில் நடந்து வரும் பண மோசடி- உஷார் மக்களே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா விமர்சகரும், பிஸ்மியில் வலைபேச்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசி வருபவர் தான் வலைப்பேச்சு அந்தணன்,இவர் சினிமா பிரபலங்கள் பற்றியும் வரவிருக்கும் திரைப்படங்கள் குறித்த தகவல்களையும் பகிர்ந்திருக்கின்றார்.

இது தவிர சினிமா பட்ஜெட், நடிகர்கள், சினிமா கலைஞர்கள், சினிமா வெற்றி தோல்வி, ஷுட்டிங் உள்ளிட்ட பல தகவல்களை மக்களுக்கு சுவாரஸ்யமாகத் தருபவர் தான் இவர். இவருக்கு என தனிப்பட்டை ரசிகர்கள் உள்ளனர். 


அத்துடன், இவருக்கு யூடியூப், ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாவிலும் அக்கவுண்ட் உண்டு. இந்த நிலையில், இவரது இன்ஸ்டா அக்கவுண்டை ஓபன் செய்ய முடியாத  நிலையில், இவரது பெயரில்  ஒரு மர்ம  நபர் போலி அக்கவுண்ட் தயார் செய்து, அவர் பெயரில் பணம் கேட்டு மோசடி செய்து வருவதாகவும் ரசிகர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலைபேச்சு அந்தணன் எச்சரித்துள்ளார்..

இதனால் இவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பதோடு இவரது இன்ஸ்டாகிராமை யார் ஹெஃக் செய்தார்கள் என்பது இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement