ஆங்கர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வீரன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட், முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆனந்த் அம்பானியைக் காதலித்து வந்தார். இதனால் திருமணத்திற்கு இரு வீட்டாராம் சம்மதம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் இவர்களின் நிச்சயதார்த்த விழா பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இவ்விழாவிற்கு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
அந்த வகையில் ஐஸ்வர்யா ராய் பச்சன், கிரண் ராவ், ஸ்ரேயா கோஷல், ராஜ்குமார் ஹிரானி, விது வினோத் சோப்ரா, சச்சின் டெண்டுல்கர் மற்றும் பலர் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் பிரமாண்ட நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!