நடிகர் மகேஷ்பாபுவின் தயார் காலமான செய்தியை அடுத்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் மகேஷ்பாபு.தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் இவர் தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கின்றார்.
இந்த நிலையில் இவரது அம்மா இந்திராதேவி காலமாகியுள்ளார்.இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மனைவி ஆவார்.இவர்களுக்கு மகேஷ் ,ரமேஷ் என்ற இருமகன்களும் மஞ்சுளா, பிரியதர்ஷினி, பத்மாவதி என மூன்று மகள்களும் உள்ளனர்.
இன்று காலை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இந்திராதேவியின் உயிர் பிரிந்தது.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா உட்பட பல நடிகர்கர் நடிகைகள் பலரும் இரங்கல் தெரிவிப்பதற்கு படையெடுத்து வந்த நிலையில் மகேஷ்பாபுவின் மகள் அவரின் மடியில் இருந்து தேம்பி தேம்பி அழும் வீடியோ இணையத்தில் வைளியாகி வைரலாகி வருகின்றது.
Listen News!