தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் வரலக்ஷ்மி சரத்குமார். இந்நிலையில் இவரின் நடிப்பில் தற்போது 'கொன்றால் பாவம்' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் வரலக்ஷ்மியுடன் இணைந்து சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். இப்படத்தின் உடைய ப்ரோமோஷன் நிகழ்வுகள் தற்போது முழு வீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படக்குழுவினர் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கும் ப்ரோமோஷனுக்காக வருகை தந்துள்ளனர். அந்த சமயத்தில் சூப்பர் சிங்கர் நடுவர்கள் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள் மற்றும் ஸ்வேதாவுடன் வரலக்ஷ்மி மற்றும் சந்தோஷ் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.
அப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது.
Listen News!